சுமனரதன தேரர் தங்கியுள்ள விகாரையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் கைது

அம்பிட்டிய சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய, சுமனரதன தேரரின் உறவினர் ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.