இரணைமடு காப்புக்காட்டில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு
இரணைமடு காப்புக்காட்டில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளை கொண்டு செல்ல தயார்படுத்திய நிலையில் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மரக்குற்றிகள் டிப்பர் ரக வாகனத்தில் மணலுக்கு அடியில் கவனமாக மூடப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
44 தேக்கு மரக் குற்றிகள், வாள் ஒன்று, 02 ரம்பங்கள் மற்றும் 02 இரும்பு சவல்கள் அங்கு காணப்பட்டன.
மரக்குற்றிகள் உள்ளிட்ட கருவிகள் மேலதிக விசாரணைக்காக மாங்குளம் வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை