வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு…

வாய்ச்சுகாதாரம் மற்றும் வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எம்.எம்.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல் வைத்தியர்களான டொக்டர் ஏ.ஆர்.எம்.கடாபி, டொக்டர் எம்.ஆர்.ஜி.என்.குமாரி, டொக்டர் எஸ்.என்.டயஸ் ஆகியோர் வாய்ச்சுகாதாரம் மற்றும் வாய்ப்புற்று நோய் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இதன்போது தாதிய பரிபாலகர் பீ.ரகுநாதமூர்த்தி, விடுதி முகாமையாளர் எம்.எம்.அமானுல்லா ஆகியோருடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் என பலரும் பலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.