தேர்தல் நடக்குமா? நடக்காதா? – தேர்தல் ஒத்திவைக்கக்கோரும் மனுவின் மேலதிக விசாரணை…

தேர்தல் நடக்குமா? நடக்காதா? – தேர்தல் ஒத்திவைக்கக்கோரும் மனுவின் மேலதிக விசாரணை 23ம் திகதி…உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான மனுவை விரைவுபடுத்துமாறு கோரும் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம். விஜேசுந்தரவின் மனுவிற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை என அவரது சட்டத்தரணிகள் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனால் மேற்படி மனு மீதான மேலதிக விசாரணைகளை உயர்நீதிமன்றம் 23 ஆம் திகதியே மேற்கொள்ளவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.