நோட்டன் ப்ரிட்ஜ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு…

நோட்டன் ப்ரிட்ஜ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு…நோட்டன் ப்ரிட்ஜ் – தியகல பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் முன்னதாக இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக . பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிய பேரூந்து ஒன்றே நோட்டன் ப்ரிட்ஜ் – தியகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது . இவ்விபத்தில் காயமடைந்த 23 பேர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையிலும், ஒருவர் பேராதனை வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் கண்டி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் கொழும்பு – மஹரகம பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.