சிறிதம்ம தேரரின் மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்ஷு பலமண்டலத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.

கல்வெவ சிறிதம்ம தேரர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை அறிவித்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.