அரசாங்கத்தினால் 53 வீதமான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன…. !

அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53 வீதமானவை கடந்த சில மாதங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்காக 191 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்காலத்தில் புனரமைப்பு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக கணிசமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.