வடக்கின் சமர் வெற்றிக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது குருநகர் பாடுமீன்

ஊரெழு றோயல் வி.கழகம் நடத்திய “வடக்கின் சமர்” தொடரின் சம்பியனாக குருநகர் பாடுமீன் வி.கழகம் தெரிவானது.

இன்று மாலை உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், குருநகர் பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகம் மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 3:1 என்ற கோல் கணக்கில் குருநகர் பாடுமீன் வி.கழகம் வெற்றி பெற்று வடக்கின் சமர் கிண்ணத்தை தூக்கியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.