தென்மராட்சியிலும் போராட்டம்!

நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் வங்கிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

அதற்கமைய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்காரணமாக, அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறாத்தால் வருகை தந்த நோயாளர்கள் திரும்பி சென்றனர்.

மேலும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் அமைந்துள்ள அரச வங்கிகள், தனியார் வங்கிகள் சிலவும் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.