இந்தியா செய்த உதவிகளை போல அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துகூட உதவிகளை வழங்கவில்லை: அலி சப்ரி

இந்தியா வழங்கிய உதவியைப் போன்று ஏனைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துகூட உதவிகளை வழங்கவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

3.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கடன் வரி எங்களுக்கு இன்னொரு தடவை போராட ஒரு உயிர்நாடியை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதலின் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது எனவும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.