மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் காணி பெற்றுக்கொள்வதற்கான களவிஜயம்…

சுமன்)

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்ககத்தினால் திராய்மடு பகுதியில் புதிதாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் காணியொன்றினைப் பெறும் முகமான கள விஜயமொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபையின் திட்ட முன்மொழிவுக்கமைவாக, பொதுச் சபையின் அங்கீகாரத்துடன் திரய்மடு பகுதியில் புதிதாக எரிபொருள் நிரப்பு நிலையைமொன்றை அமைப்பதற்காக மேற்படி பகுதியில் காணியொன்றைக் கோரி மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளுக்கு அமைவாக குறிப்பட்ட பிரதேசத்தில் களவிஜயமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேற்படி களவிஜயத்தில் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.துதீஸ்வரன், இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொதுமுகாமையாளர், பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க காணியின் அமைவிடம் தொடர்பில் இங்கு பார்வையிடப்பட்டதுடன், பொதுமக்கள், தொழில்புரிவோர், எனப் பலரும் இதன் மூலம் பயன்பெறும் வகையிலான இடமொன்றைப் பெறுவது தொடர்பில் இதன்போது பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.