இலங்கையில் தீவிரமடையும் தொலைப்பேசி கடத்தல்! பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி

நாட்டில் பாரிய அளவிலான கையடக்கத் தொலைபேசி கடத்தல் இடம்பெறுவதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பழுதடைந்துள்ள பயன்படுத்திய தொலைபேசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு திருத்தப்பட்டு புதிய தொலைபேசிகளாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.