20 பேர் கொண்ட கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்பட்டு 1,000 கிலோ மீன்கள் கொள்ளை!

வெலிகம, பத்தேவத்த மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள்மீது 20 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், மிரிஸ்ஸ கடலில் வைத்து அவர்களது 1,000 கிலோ மீன்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு படகுகளில் வந்த கடற்கொள்ளையர் குழுவொன்றே கடற்கரையிலிருந்து கடலின் சுமார் 6 மைல் தொலைவில் வைத்து மீன்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தேவத்த மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற லக்கிஷாப் என்ற மீன்பிடி படகிலிருந்த மீன்களே கொள்ளையிட்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.