போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழா!

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழாவும் உணவு செய்முறை கண்காட்சியும் இன்று வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி தலைமையில் இந்த கண்காட்சியும் மகளிர் தின விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னிக்கோப் அமைப்பின் பணிப்பாளர்களான ரஞ்சன் சிவஞானசுந்தரம்,திருமதி ரேணுகா சிவஞானசுந்தரம்,டாக்டர் மாலதி வரன்,நல்லையா கல்வி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலச்சந்திரன் நல்லையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்கள் மற்றும் பெண்களினால் கூட்டாக முன்னெடுக்கப்படும் உற்பத்திகள் மற்றும் ஏனைய உணவு செய்முறை பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
அத்துடன் பெண்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் மகளிர் தின சிறப்புரைகளும் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.