பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள்- குளிரூட்டிகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்க மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 68 தொலைக்காட்சிப் பெட்டிகள், 77 குளிரூட்டிகள், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் ஆர்.எஸ்.வீரசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.