தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு களுவாஞ்சிக்குடியில்!

இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் தின நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல், தமிழ் மொழி வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டதுடன் யுத்ததில் உயிரிழந்த மாவீரர்கள்,பெண் போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட மக்கள் நினைவுகூரப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மகளிரின் சிறப்பு பற்றியதான கவிதை, பேச்சு மற்றும் பாடல் என்பன இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உபதவிசாளர் ரஞ்சினி கனகசபை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சி மகளிர் அணி உறுப்பினர்களின் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் இடம்பெற்று மகளிர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.