மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு ஆலங்குளாயில் சனி நடைபெறும்!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் புகழ்பூத்த விளையாட்டு வீரருமாகிய அமரர் க.சீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனமூக நிலையத்தில் 11-03-2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

வடக்கின் ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலையாகிய தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் இந்தக் குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உன்னதமான உயிர்க்கொடை நிகழ்வில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.