அஹிம்சைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமென சித்தரித்தால் தவறான பாதை தோற்றம் பெறும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை

அஹிம்சை வழி போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என சித்திரித்தால் மாணவர்களின் போராட்டம் தவறான திசை நோக்கிச் செல்லும். ஜனநாயகப் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டம் என அரசாங்கம் சித்திரிப்பது முற்றிலும் தவறானது என ரெலோவின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாட்டில் ஜனநாயகம் மரணிக்காது உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் குறிகாட்டியே தேர்தல். அதாவது மக்களுக்கான வாக்குரிமை.

மக்களது விருப்புக்கு மாறாக அரசமைப்புக்கு முரணாக நடைபெற வேண்டிய தேர்தல்கள் அனைத்தும் அரசாங்கம் தோல்வியடைந்து விடுவோமா என்ற காரணத்துக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இதுவே எமது நாட்டின் ஜனநாயகப் பெருமை.

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார், குண்டர் படையினர் திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தினார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிராகவும் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் மாணவர்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

போராட்டகாரர்களை அரசாங்கம் பயங்கரவாதிகள் என சொல்லுகின்றது. அரசியல் கட்சிகளின் பயங்கரவாதிகள் எனக் கூறுகின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.