பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு, வீசப்பட்டுள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொல்பொருள் திணைக்களம், தொல்பொருளை பாதுகாப்பது என கூறிக்கொண்டு இந்துக்கள் இக்கோவிலுக்கு போவதை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவ பாதுகாப்பு வலயத்தில் இடம்பெறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.