அம்பாறை – நிந்தவூரில் இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு! 

அம்பாறை – நிந்தவூரில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமை அகற்றுவதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் அழைத்து வந்து பார்வையிட்டிருந்தனர்.

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையால் பரிசுத் தொகையாக 100,000 அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப்பெற்றது.

இதனைக்கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான பிரதேச சபையின் பழைய கட்டடம் அமைந்துள்ள இடத்தில் பண்ணை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான வர்த்தக கட்டட தொகுதியை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இராணுவ உயர் அதிகாரி, அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களென பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.