வங்கிகட்டமைப்பு மிகமோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்!   நாலக கொடஹேவா எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய 13.1.39 ரில்லியன் ரூபா தேசிய கடனை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனால் வங்கி கட்டமைப்பு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என சுயாதீன எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

பொருளாதார மீட்சிக்கான எந்த திட்டங்களும் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளதால் நாணய நிதியம் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி சர்வதேச ஊடகத்திற்கு நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

இலங்கை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு(2024,2025,2026,2027,2028) 21.9 பில்லியன் டொலர் அரச முறை கடன் மீள் செலுத்த வேண்டும்.

பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் பேச்சுகளை மேற்கொண்டு கடன் தவணைக் காலத்தை மட்டுப்படுத்திக் கொள்ள அல்லது கடன் தொகையை குறைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு கடன்களை மாத்திரம் மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

13.1.39 ரில்லியன் ரூபா தேசிய கடனை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.இந்த உண்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவில்லை.

தேசிய கடன் மறுசீரமைக்கும் போது வங்கி கட்டமைப்பு முழுமையாகப் பாதிக்கப்படுவதால் வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய வைப்புக்கள் பாதிக்கப்படும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் நிச்சயம் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

மக்கள் போராட்டத்தைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தை உருவாக்க விசேட கவனம் செலுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுவிட்டதால் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை விடுத்து மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.