ஒழுக்கமும் சட்டமும் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது! ரவி கருணாநாயக்க ‘அட்வைஸ்’ 

ஒழுக்கமும் சட்டமும் இன்றி ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும், எனவே மக்கள் இந்த நேரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் மக்களைப் பலப்படுத்துவதற்கும் அன்றி நாட்டை அழிப்பதற்காகவே எதிர்க்கட்சிகளும் சில தொழிற்சங்கங்களும் செயற்படுகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் அறியாமை காரணமாகவே பல அரசாங்கம் தோல்வியை சந்திக்கின்றன என்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.