திருமலை – கொழும்பு ரயிலால் மோதுண்டு 2 யானைகள் பலி; ரயில் தடம் புரண்டது!

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (8) பயணித்த இரவு தபால் ரயிலால் ஹபரணை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதப்பட்டு, அவை உயிரிழந்துள்ளன என ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இருப்பினும்  பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில் பாதையை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.