ஊழல் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் – சஜித்

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாகக் கொண்டு வர வேண்டும்.

இதன்மூலம் பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இவ்வாறு குறித்த சட்டமூலத்தைக் கொண்டுவருதல் மூலம் ஊழல்வாதிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும்.

ஆனால், தற்போது அரசாங்கம் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தையே கொண்டுவர முனைகிறது.

அதன் ஊடாகத் தமது உற்ற ஊழல்வாதி கூட்டாளிகளை அரசாங்கம் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் பயங்கரவாதத தடுப்பு சட்ட மூலத்துக்கு பதிலாக ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தையே கொண்டுவர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.