புத்தாண்டை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

மிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சின் உத்தரவுக்கமைய வவுனியா வர்த்தக நிலையங்களில் நிறுவை, அளவைப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை  நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேருந்து நிலையம், நெளுக்குளம், பஜார் வீதி ஆகிய பகுதிகளிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, வவுனியாவில் உள்ள சதோச விற்பனை நிலையம், காகில்ஸ் ஃபுட்சிட்டி மற்றும் தனியார் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் என்பவற்றில் இவ்விசேட சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது நிறுத்தல் தராசுகளில் உள்ள முத்திரைகள், நிறுத்தல் அளவைகள், பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறுத்தல் அளவைகள் குறித்து அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.