காலாவதியான ரின் மீன்கள் விற்பனை: சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது!
காலாவதியான ரின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரின் மீன்களின் பெறுமதி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது












கருத்துக்களேதுமில்லை