அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்காம்’ தமிழ் தலைமைகளுக்கு டக்ளஸ் அட்வைஸ்!

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக  வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்இ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்குத் தயாராக இருப்பதாகஇ கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றியிருந்தமை தொடர்பாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.