மன்னாரில் தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நேற்று (திங்கட்கிழமை) மதியம் மன்னாரில் நினைவு கூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன்போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.