அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த கிழக்கு ஆளுநர்!

– அபு அலா –

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன் அது தொடர்பான கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.

ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதற்கு சாதகமான பதிலையும் வழங்கி வைத்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.