மின்சாரமின்றி இருக்கும் குடும்பங்களுக்கு விசேட கவனம் செலுத்த ஆளுநர் பணிப்பு

!

– அபு அலா –

கிழக்கு மாகாணத்தில் மின்சாரமின்றி 15 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன எனவும், அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்குப் பணிபுரை விடுத்தார்.

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த பணிப்புரையை வழங்கி வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

காற்றுமின்சாரம், சூரிய ஆற்றல், நீர் மின்சாரம் போன்றவற்றைப் புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களைக் கொண்டு, முழுமையாக இயங்கக்கூடிய மின்சாரத்தை வழங்கும் எமது நாட்டிலுள்ள மாகாணங்களில், முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை  மாற்றுவதற்கான ஆய்வை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆளுநர் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.