காரைதீவு சுவாமி விபுலாநந்தர்”ஞாபகார்த்த மணிமண்டபத்தில் திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு

திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் இசைத்துறை விரிவுரையாளர்கள் பங்கேற்பு..

இந்துசமய கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் திரு ய.அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலினூடாக இடம்பெற்றுவருகின்ற திருமுறை பாராயண பயிற்சி வகுப்பு
இந்நிகழ்வானது காரைதீவு சுவாமி விபுலாநந்தர்”ஞாபகார்த்த மணிமண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேவார உதவி பேராசிரியர் குமாரவயலூர் திருமுறைக்கலாநிதி முனைவர் திருஞானபாலச்சந்திரன் ஓதுவார் அவர்களுடன் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இசைத்துறை பிரிவின் கெளரவ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி சிவகெளரி கிரீஸ்குமார் அம்மையார் அவர்களுடன் இணைந்து சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் கிரிஸ்குமார் அவர்களும்,சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலைய பண்ணிசை வளவாளர் திருமதி ஜெயக்கணேஸ் புவனேஸ்வரி சிவஶ்ரீ மயூரவதனக்குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,இணையவழி திருமுறை வகுப்பில் கலந்து கொள்பவர்கள் இந்து கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

ஏற்பாடுகளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டார்

(செய்தியாளர்−காந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.