திருகோணமலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

ஹூஸ்பர்

திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ்
வாழும் வட்டுவான் க வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய
பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல்
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானதுவெருகல் பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பரமேஸ்வரனின்
கோரிக்கைக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் கடமையாற்றும் குணாளன்
என்பவரின் முயற்சியின் பயனாக மறைந்த சுரேஸ் குமாரின் நினைவாக கந்தையா
தொண்டு நிறுவனத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 47
மாணவ மாணவிகளுக்காக மேற்படி பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் வறுமை நிலை கல்விக்கு தடை இல்லை
என்பதை வைத்து கற்றல் உபகரணங்களின் பிரதிபலனாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில்  வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், மாவட்ட செயலக
சமூக சேவை திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.