தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவுக்கு ஹக்கீம் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு வேலையிலேயே இதனை சபைக்கு அறிவித்தார்.

பிரதி சபாநாயகர் தொடர்ந்து அறிவிக்கையில் –

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அங்கத்துவத்தை இராஜினாமா செய்தமையால் அந்த இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 130 (3) இன் ஏற்பாடுகளுக்கு அமைய, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 8 ஆம் திகதி கூடிய தெரிவுக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான  துறைசார் மேற்பார்வை குழுவில் சேவையாற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ளார். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.