புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் ஜூன் 08 தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மகா சங்கத்தினரின் செத்பிரித் பராயணங்களுக்கு மத்தியில், புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மங்கள விளக்கேற்றி சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் தனது புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இந் நிகழ்வில் நிறைவேற்று பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.