தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சங்கம் யாழ்.மாவட்டத்தில் உருவாக்கபடவேண்டும்! மாவட்ட செயலர் வலியுறுத்து

 

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மாவட்ட ரீதியாகத் தமக்குள் சங்கமொன்றை உருவாக்கி செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கோரிக்கை விடுத்தார்.

பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாள்களும் ஓய்வின்றி கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதால் மாணவர்களுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகள், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாகத் தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதன்போதே, யாழ். மாவட்ட செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு –

தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

குறித்த குழுவில் சம்பந்தப்பட்ட துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கும்போது தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகளை உள்ளடக்க வேண்டிய தேவையுண்டு.

அந்த வகையில், தனியார் கல்வி நிலையங்கள் ஒரு கூட்டாக, சங்கமாக பதிவு செய்து செயற்படும்போது அதனை மேற்கொள்ள எமக்கு இலகுவாக இருக்கும்.

தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும். தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கண்காணிக்கப்படும்.

தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம் மற்றும் பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயம் ஆகும்.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.