யாழில் இருந்து நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாத யாத்திரை முன்னெடுப்பு!

நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுர சமன் பெரேரா, வடமாகாண பணிப்பாளர் காமினி, யாழ் மாவட்ட பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சம்பிர்தாய பூர்வமாக யாத்திரையை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த யாத்திரிகர்கள் உகந்தை முருகன் ஆலயம் சென்று அங்கிருந்து சுமார் 300 இளைஞர்கள், யுவதிகள் நாடளாவிய ரீதியிலிருந்து யாத்திரை செல்லவுள்ளனர்.

இதில் இளைஞர்சேவை மன்றங்களின் நிர்வாகிகள், கிராம சேவகர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாத்திரிகர்களுக்கு கருகம்பனை இந்து இளைஞர் கழகம் சிற்றுண்டிகளை வழங்கியதுடன் சந்நிதியான் ஆச்சிரமம் போக்குவரத்து படிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.