முப்பது வருட யுத்தம்! தவறிழைத்த கோட்டாபய – வெகு விரைவில் தேர்தல் என அறிவிப்பு..T
முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்சக்களை பெரும்பாலான மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும்
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவறிழைத்தாரே தவிர, பொதுஜன பெரமுன தவறிழைக்கவில்லை.
வெகுவிரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும். ராஜபக்சக்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும்.
அடிமட்ட மக்கள் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2016 ஆம் ஆண்டு உதயமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என தொடர்ந்து மக்களாணையை இக்கட்சி உறுதிப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை