விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும்!  தெற்கின் கருத்துக்கள் கட்டியம் கூறுகின்றன என்கிறார் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் எனத் தென்னிலங்கை அரசியல் வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய இந்தச் சூழலில் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, சர்வதேச நாணய நிதியம் மற்றும், உலக வங்கிகள் என வெளிநாட்டு நிறுவங்கள் கொண்டிருக்கும் இலங்கை மீதான நம்பிக்கையை இழக்கக் காரணமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனால் நாடு மேலும் சரிவை சந்திக்ககும் என்பதால் விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவாக ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.