கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸுஹ்றாநதா தேசிய ரீதியில் சாதனைபடைப்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தால் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் தொழில்நுட்ப சிறார்கள் பிரிவில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா (வயது – 13) தேசிய ரீதியில் வெற்றி பெற்ற 5 சாதனையாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளுக்குமான புத்தாக்க சிந்தனைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கும் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஸூஹ்றா நதாவினால் முன்மொழியப்பட்ட சிறுவர்களுக்கான எஸ்.டி.ஏ. கற்றல் தொடர்பான மொபைல் பயன்பாட்டு மென்பொருள் செயலிக்காக இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நோர்வேயின் தூதுவர் டிரினி ஜோர்னலி எஸ்கடேலியால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பரப்புதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பை செய்து வரும் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு புத்தாக்க சிந்தனையாளர்களுக்காக கடந்த சில வருடங்களாக இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இம்மாணவி தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் அஸ்ரப் ஹஸ்னா ஷெர்பின் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.