மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான பொறுப்புச் சான்றிதழ், அடையாள அட்டை வழங்கல்

 

நூருல் ஹூதா உமர்

மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான உத்தியோபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் செயற்திட்டம் அமைப்பின் தலைவர் எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் தலைமையில் சாய்ந்தமருது கமு ஃகமுஃ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும் அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ஐ. எல். எம். இர்பான், மூத்த செய்தி நிருபரும், அமைப்பின் பிரதி தலைவருமான எம். ஐ. சம்சுதீன், அமைப்பினுடைய உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், அமைப்பின் கீழ் இயங்கும் பிரிவுகளின் தலைவர்கள் என்று பலர் பங்கேற்றனர்.

இதன் போது கடந்த காலங்களில் இவ் அமைப்போடு இணைந்து செயற்பட்டு வந்த அமைப்பின் பிரதேச அமைப்பாளர்கள், எச்.டி.ஜி. ஸ்ரீPலங்காவின் கீழ் இயங்கும் பிரிவுகளின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ. எல். இர்பான் அவர்கள் வழங்கி உத்தியோகபூர்வமாக அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு எதிர் கால செயற்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.