சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!

 

நூருல் ஹூதா உமர்

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் இன்று (புதன்கிழமை) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.