வடக்கு, கிழக்கில் தற்போது மௌன யுத்தம் நடக்கிறது! கோவிந்தன் கருணாகரன் சுட்டிக்காட்டு

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ஆம் ஆண்டு, முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33 ஆவது நினைவு அஞ்சலி சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர்  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே  பல நாள்கள் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த நாளாக இருக்கின்றன.

அந்த நாள்களின் ஒரு நாளாகவே 19 ஜூன் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் போரட்ட பாதையிலே ஒரு கறுப்பு புள்ளி விழுந்த நாளாகும்.

தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆயுதப் போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம்.

இவ்வாறு தனி சிங்களசட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 1957, 1958, 1978 போன்ற கலவரங்களைத் தொடர்ந்து மிகவும் மோசமாக 83 கலவரத்தை உருவாக்கி கப்பல் மூலம் வடக்கு, கிழக்கிற்கு சொந்த நாட்டிலே அகதிகளை அனுப்பிய வரலாறு ஆகும்.

இவ்வாறு தமிழர்கள் மீது நடந்தேறிய இனழிப்பிற்கு எதிராக அஹிம்சை மூலமாகப் போராடிய எமது தலைவர்கள் அதில் நம்பிக்கையிழந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்துக்குள் தள்ளப்பட்டோம். அதனால் 1969 ஆயுத போராட்டம் முதல் முதல் தமிழீழ விடுதலை இயக்கம் அதில் பிரபாகரன் உட்பட போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழவிடுதலை போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்றது. முன்னணியில் 5 போராட்ட இயக்கங்கள் இருந்தன. அப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் எமது இலக்கை அடையமுடியும் என 1984 ஆம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று ஈரோஸ், ரொலே, ஈபிஆர்எல்எப். என மூன்றும் ரி.என்.எல்.எப். உருவாகியது பின்னர் விடுதலைப் புலிகளும் அதில் இணைந்தனர் என்பது வரலாறுகள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரம் வடக்கு, கிழக்கிலே இந்த போராட்ட பாதையில் நின்று இருந்தாலும் 2009 மே 18 உடன் இந்த ஆயத போராட்டம் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டது. இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம். அதில் போரட்ட தலைவர்கள் மாத்திரமல்லர் மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

ஜே,ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதானப் பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்கினர.; 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடக்கு, கிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது.

அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும், தமிழரின் குடிபரம்பலை எவ்வளவு வேகமாக மாற்றி அமைக்கவேண்டும,; இணைந்திருந்த வடக்கு, கிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையைத் திட்டமிட்டு செய்துவருகின்றது

தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரை அமைக்கவேண்டும் என்ற அவர் தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆகவே தற்போது வடக்கு, கிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம். தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு, தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிபாக உயர்ந்த மலைகளில் அமைப்பது, சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

குருந்தூர் மலையிலே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள் இன்று தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளது. சரத்வீரசேகர, உதயகம்மன்பில, விமல்வீரன்ஸ போன்ற அரசியல்வாதிகள் தங்களது நிகழ்ச்சி நிழலுக்குள் செயலாற்றிக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம் என தம்பட்டம் அடிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக சரத்வீரசேகர தெரிவித்தார்.

எனவே தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என அமைச்சருக்கு தெரியவேண்டும். அதேவேளை கோட்டாபயவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது. கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். எனவே இனப்பிரச்சினை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வைக் கேட்கவில்லை.

நாடு சுதந்திரமடைந்த காலம் இருந்தே தமிழர்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். தந்தை செல்வா பேச்சு, பண்டா செல்வா ஒப்பந்தம்,  டட்லி செல்வா ஒப்பந்தம் மற்றும் திம்பு பேச்சு, 2001 பேச்சு, 2009 பின் மஹிந்தவுடன் 18 சுற்று பேச்சு. உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடத்துகின்றார். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. இந்த 13 ஆம் திருத்த சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்காகன தீர்வாக யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை,

ஆனால் அரசியல் அதிகாரத்தில் ஆசையற்ற பத்மநாபா, கிடைப்பதை எற்றுக் கொண்டு அதிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்ற அடிப்படையில் அந்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட முதல் தலைவர் ஆவார். அதிகாரத்தில் ஆசையில்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஒரு தலைவரது ஞாபகாத்த தினம்தான் இந்த 19 ஜூன் என்பது.

எனவே நாங்கள் கிடைப்பதை பெற்றுக் கொண்டு எங்கள் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ்த் தேசிக்ய கூட்டடைப்பு விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்திலே 2001 உருவாக்கப்பட்டது. அப்போது கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி இருக்கவேண்டு என்ற காரணத்துக்காக இந்த கூட்டமைப்பை உருவாகினோம்.

2009 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசியத் தேசியக் கூட்டமைப்பு அசைக்கமுடியத சக்த்தியாக இருந்தது. 2004 தமிழர் விடுதலை கூட்டணி வெளியேறியது. 2010 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. 2015 ஈபிஆர்எல்எப் வெளியேறியது அதேபோன்று 2023 தமிழரசு கட்சி வெளியேறியுள்ளது ஆனால் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான 5 கட்சிகள் கொண்ட அணியாக செயற்படுகின்றோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.