நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜுலை 13 இல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஜூலை 13ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

சாட்சியங்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.