நெல்லின் விலை தொடர்பில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

உரிய நேரத்தில் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அமுல்படுத்தப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது.

கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்ததுடன், அங்கு விவசாயிகள் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தற்பொழுது நெல் 48 தொடக்கம் 50ரூபாய்க்கே கொள்வனவு நடைபெறுவதாகவும், ஆனால் தமக்கு அறுவடை முடிவில் 85 ரூபாய் செலவினமாகக் காணப்படுவதாகவும்; விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் அவர்களின் களஞ்சியசாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதுடன், நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மகஜர்கள் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் கையளிக்கப்பட்டன.

    

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.