தன்னலம் கருதாத ஒரு நல்ல உள்ளம் இறைவனடி சேர்ந்தது!!சமூக சேவையாளர் அருள்நாதன் அகால மரணம்!!கவலையில் தத்தளிக்கும் காரைதீவு மண்…

அருள்நாதன் என்னும் அறம் இந்த அறம் இன்று நம் எல்லோரையும் விட்டு இறைவனடி சேர்ந்து விட்டது,கல்விக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல் கடல் கடந்த தேசத்தில் வாழ்ந்து தாயகம் திரும்பி இடைவிடாது சேவையை தொடர்ந்தவர்.
இந்த மண்ணிற்கும் மக்களுக்குமாக பல வருடங்களாய் ஏழை, பணக்காரன் ,சாதி, மதம் இவைகளை எல்லாம் புறந்தள்ளி இந்த ஊர் மக்கள் சமத்துவத்துடன் வாழவேண்டும் என்பதற்காக இளம் வயதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அதிசயப் பிறவி இவர்.

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம் (KDPS) , ஞானக் கீற்று கல்வியகம்,போகர் கல்வியகம் அட்டப்பள்ளம் எனும் பல்வேறு அமைப்புகள் மூலம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

இவர் 41வது வயதில் திடீர் மாரடைப்பால் இன்று (29) தனது காரைதீவு மண்ணிலே வைத்து அவரது உயிர் பிரிந்தது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.