வரி செலுத்த வேண்டிய நபர்களை உள்ளடக்கி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் மீது சுமை சுமத்தப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரி வலையமைப்பை விஸ்தரித்து, வரி செலுத்த வேண்டிய நபர்களை உள்ளடக்கி வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைப்புக்கள் கூட எதிர்பார்க்காத வேகத்தில் நாடு பொருளாதார ரீதியில் வலுவடைந்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த சாதனைகள் அனைத்தும் மக்களுடையதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.