முத்துராஜாவுக்கு சிகிச்சைகள் ஆரம்பம்!

தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘முத்துராஜா’ யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட விமானத்தின் ஊடாக ‘முத்துராஜா’ தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டது.

முத்துராஜாவின் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரிசோதனைகளுக்கு தேவையான இரத்த மாதிரிகள் யானையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.