பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சாய்ந்தமருதில் விளையாட்டு விழா – 2023

 

நூருல் ஹூதா உமர்

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 03 அணிகளாக பிரிக்கப்பட்டு மைதான நிகழ்வுகளும், கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் இடம் பெற்றது. இதில் கிங்ஸ் லெவன் அணி – 58 புள்ளிகளையும், டைடன் அணி 48 புள்ளிகளையும், றோயல் சலன்ஸ் அணி 47 புள்ளிகளையும் பெற்று முதலாம் இடத்தை கிங்ஸ் லெவன் அணி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்த விளையாட்டு விழாவில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் , நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத், பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம். சமூன், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட் , திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றியாஸ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.