உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

நூருல் ஹூதா உமர்

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.