டொலருக்கு அடிமையானவர்களே ராஜபக்ஷர்களை விமர்சிக்கிறார்கள்!  சாகர காரியவசம் சாடல்

டொலருக்கு அடிமையானவர்களே ராஜபக்ஷர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஹிங்குராகொட பகுதியில்  இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றினார்களே தவிர நாட்டுக்கு தீ வைக்கவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கத்தில் அமைச்சரவையில் இருந்தவர்கள் பொருளாதாரப் பாதிப்பை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.

ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக்கொண்டு கடந்த ஆண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. டொலருக்கு அடிமையானவர்கள் ராஜபக்ஷர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள்.

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பெரும்பாலான மக்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே போலியான பிரசாரங்களுக்கு மக்கள் இனி ஏமாற்றமடைய மாட்டார்கள். கட்சி என்ற ரீதியில் மறுசீரமைப்புடன் பலமடைந்துள்ளோம்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுனவவே ஆட்சியமைக்கும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். எக்காரணிகளுக்காகவும் எமது கட்சி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.